Saturday, October 10, 2009

@ 6:55 PM எழுதியவர்: வரவனையான் 2 மறுமொழிகள்



ரொம்ப நாளைக்கு பிறகு தோழர்.போண்டா கணேசனை பார்த்தேன் தனது நிரந்திர அடிமை டி.வி.எஸ்.அம்பதில் ஒரு செஞ்சட்டை தோழரோடு போய்க்கொண்டிருந்தான். அந்த தோழரையும் எனக்கு பரிச்சியம் உண்டு அவரிடம் இருப்பது அந்த சிவப்பு சட்டையும் வெள்ளையிலிருந்து பழுப்பாய் நிறம் மாறிக்கொண்ட வேட்டி மட்டும்தான், ஆனால் அந்த தோழரை பற்றி மேலும் ஒரு தகவல் அவர் பக்கதிலிருக்கும் ஒரு மலைப்பகுதியில் போண்டா சார்ந்திருக்கும் தேர்தல் இடதுசாரி அமைப்பின் கிளை பொறுப்பாளராய் உள்ளார் அந்த மலையில் உள்ள ஒரே சிவப்புத்தோழர் அவர் மட்டுமே. இதில் முதன்மையான விதயம் என்னவென்றால் அவர் செய்யும் தொழில் டவுணில் 60 ரூவாய் என்கிற விலையில் ஒரு குவார்டரை வாங்கிக்கொண்டு மலையில் உள்ள பழங்குடியினரிடம் 150 ரூபாய்க்கு விற்பதே. அவர்களாக காய்ச்சினால் அதை மதுவிலக்கு காவல்துறையினரிடம் போட்டுக்கொடுப்பது உபவேலையாக செய்தி வருகிறார். வழக்கமாய் போண்டாவைத்தான் இழுத்து வச்சு லந்த கொடுப்பேன் இன்றைக்கு மாற்றாய் அந்த தோழரிடம் உரண்டை இழுக்கலாம் என்று முடிவு செய்து போண்டாவின் எண்ணுக்கு அழைத்து அந்த தோழரிடம் "ஏன் தோழர் "உபரி மதிப்பு" விதயத்தில் காரல் மார்க்சையே திக்கிமுக்காட வைக்கிறீர்களே 60 ரூவா குவார்ட்டரை 150 ரூவாய்க்கு வித்து இது எப்படி சாத்தியம்" இன்னாவோ பேசுறானுவப்பா என்றபடி போனை போண்டாவிடம் கொடுத்துவிட்டார்.


இனி போண்டாவின் முதல் குரல் வழி செவ்வி





sen- bonda.wav -

Sunday, September 13, 2009

@ 8:20 PM எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

ஆயினும் அடுத்த நாள் காலையில் அனைத்து நாளிதழ்களிலும் அவன் தப்பியோடியதாய் செய்தி முதன்மையாய் இருந்தது. முதல் வெட்டு ஆய்வாளர் சென்பகராசனுக்கு இடது கையில் விழுந்தது. உதவி ஆய்வாளர் "ரைபிள்" சுரேசுக்கு வலது மணிக்கட்டில் வெட்டுக்காயம் மற்றும் ஏட்டு வெள்ளைச்சாமிக்கு தோளில் ஆழமாய் ஒரு கத்திகுத்து விழுந்துள்ளது. காயம்பட்ட அனைவரும் திருச்சி அரசு பொதுமருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரினாவுக்கு அப்பாவின் மேல் கடும் கோவம், யாருக்குத்தான் வராது. சினிவாசனுக்கு தெரியாது அவன் சுடப்படப்போவது. நினைக்கையில் எல்லாம் உவ்வே என்று குமட்டிக்கொண்டு வந்தது. குளிச்சு எத்தனை நாள் ஆச்சோ அவள், அம்மா வீட்டு உள்ள கூட அனுமதிக்கமாட்டாள் அவளை, அவளை போய் சுவரோரமாய் நிற்க வைத்து. துணியை தூக்கி பார்த்தார் டி.ஐ.ஜி அனில் குமார் ஜாட்டியா. வெல்டன் பாய்ஸ் ! என்றார் சுற்றி நிற்கும் "பிரஸ்"க்கு கேட்கும்படி. "இது ஒரு துவக்கம்தான் இனி இந்த நாட்டின் இறையான்மைக்கு பங்கம் செய்வதற்கு யாராகிலும் மனதால் நினைத்தால் கூட சட்டம் கையை கட்டிக்கொண்டு இருக்காது". எனஃப் பிரண்ட்ஸ் என்றபடி அம்பாசிடருக்குள் நுழைந்து வேர்வை ஒற்றிக்கொண்டு "கோ டூ தி ஹாஸ்பிடல், ஐயாம் கேவிங் அனதர் ஸ்டேஜ் டூ பிளே" என்றார். காலையில வீட்டுல இருந்து கெளம்பி கட்சி அலுவலகம் போகும் போதுதான் பாத்தேன் அந்த சுவரொட்டியை. கிர்ர்ர்ர்ர்ன்னு கோவம் தலைக்கு ஏறுது ! முந்தாநாளு காங்கிரசுல சேர்ந்த ஒரு சுள்ளான் "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாய் பேசிய வைகோ சீமான் அமீரை கைது செய்" அப்படின்னு சுவரொட்டி அடிச்சு ஒட்டிருக்கான்யா. வக்காலி இன்னைக்கு ஓட ஓட மிதிச்சாதான்யா சரிப்படும். இன்னுமும் ராஜிவ் பொணத்த வச்சுகிட்டு இந்த கேவல அரசியல் எவ்வளவு நாளு பண்ணுவானுங்கன்னு பார்க்கலாம்ன்னு போனை போட்டேன்.

யோவ் சீயான் ! எங்கையா இருக்க ?

என்ன ராசா ! இவ்வளவு வெள்ளன கூப்புடுற -

மொதல்ல கெளம்பி பஸ்ஸான்ட் வா -

டொக்

தோழர் எங்கருகிங்க !

வீட்லடா குண்டு !

பஸ்ஸான்ட்க்கு வாங்க உடனே !

கோபி சீயான் வரும்போதே சுவரொட்டியை பாத்துட்டாரு போல! "கொட்டையை நசுக்கி கஞ்சியாக்கி விட்டுருலாமான்னு" ஒரு திகிலூட்டும் தண்டனையை அந்த சுள்ளானுக்கு முன்மொழிந்தவாறே வந்தமர்ந்தார். தோழர் வாசு குனிந்த தலை நிமிராமல் நடப்பவர்! அவர் வந்தபின் விளக்கப்பட்டது.

டேய்ய் ! சாயங்காலம் புரட்சிகர எழுச்சி இளைஞர் சங்கம் சார்பில ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் இருக்கு தோழர்."புரோட்டா" பாண்டியன் வரச்சொல்லிருக்காரு. அதுக்கு போயிட்டு அதுக்கு பிறகு பேசி எதுனா செய்யலாம்டா. அவசரபடாதிங்கடா" வயசுக்கு தகுந்த பொறுமையுடன் சொல்லிட்டுருந்தாரு "мамка му на Исус мамка му на света Майната ви на всички дяволите Луната дяволите Всемогъщия" என்றபடி மலையுச்சியில் இருந்து குதித்தான் மாரிமுத்து. ஒரு தடவைக்கு மேல் தற்கொலை முயற்சியில் இறங்கியவர்கள் பின் என்றைக்கும் சந்தேகத்துக்குரிவர்களே என்பது அவனது திண்ணமான எண்ணம். சமயங்களில் சொல்லுவான் முதல் முயற்சிகளில் செத்து போனவர்கள் பாக்கிவான்கள் என்று. "பிரஸ்"காரர்களுக்கு கவர் வழங்கப்பட்டது. சரி எல்லாரும் வந்து வண்டியில ஏறுங்க ! நேரா ஆரியாஸ்க்கு போய் மதியான சாப்பாடு' என்றார் மக்கள் தொடர்பு அதிகாரி. "ஏண்ணே தப்பிச்சு ஓடுறவேன் பேண்ட் ஜிப்புல்லாம் அவுத்து போட்டா ஓடுவான்" வெவரம் தெரியாமல் கேட்டவனை முறைத்தான் வண்ணம் டி.வி செல்வம். "வேக மசுரா கவரு மட்டும் வாங்கி உள் பைக்குள்ள வைக்க தெரியுதுல இந்த வியாக்கியான *** தியெல்லாம் அங்க கேக்கவேண்டியதானே புடுக்காண்டி" பூட்டேஜ் சரியில்லாத கடுப்பு அவனுக்கு. அம்மா வரட்டும் இன்னைக்கு பெரிய பிரச்சினை பண்ணினால்தான் சரிப்படும் ஹரினா நினைத்துக்கொண்டாள். சபேஷ் என்று டிஸ்பிளேவில் தெரியவும் ஒரே ரிங்கில் எடுத்தாள் . ஹாய் லுலு ! ஹாய் பாட் கேர்ள் ! ஸ்பார்கில் வெயிட் பண்ணுறேன்.

"புன்டையிலோக்க
வாழைக்கண்ணு வாங்கி வச்சுருக்கேன், ரீமாண்ட் பண்ணிட்டாய்ங்கன்னா பிரபாகரனா
வாழை நடுவாரு" பதட்டத்துடன் தோழர் வாசு அலறினார்

பாலக்காடு தாண்டி வரும்போது தமிழ்நாடு போலிசு ஒக்கார வச்சுருச்சாம், துலுக்கக்கூதிகளுக்கு இந்நேரம் என்ன மசுர புடுங்கிற வேலையாலே" வர்ண,மொழி.இனம்,மத பாகுபாட்டுடன் கூடிய தோரனையுடன் மாயத்தேவர் ,எஸ்.அய்'யின் குரல் கேட்டது. ரெண்டு பிட்பாக்கெட்ட பொச்ச கிழிச்சு ஒக்கார வச்சுருக்கேன்யா'

பொச்ச கிழிக்கிறதுன்னா என்னான்னு மாரிமுத்து நேரில பாத்த போது குண்டியில பீ தள்ளியிருச்சு






- நேரங் கெடைக்கிறதப்போ பேசலாம்

Monday, August 31, 2009

@ 10:38 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்

இவர்களோடு ஒப்பிட்டால் உண்மையில் வளர்மதி யோக்கிவான், கூடுதாலாய் நேர்மையாளன் நிசமாய் அவனுக்கு தெரியாது "அவனது வென்சுருட்டு கடன்கள் அடையாததன் பொருள்". இது போன்ற எழுத்து வேசிகளின் முகத்தில் பீயள்ளி பூசினால் என்ன குற்றம், அதற்கு ஏன் ஒரு இயக்கம் நடத்தக்கூடாது.

அந்த விடீயோவினை ஒரு நான்கு குழந்தைகளின் தாய் (தன் கணவன்,இரு பிள்ளைகளை போரில் இழந்தவளாம்)தன் தாலிக்கொடி அவிழ்த்து வாங்கி வெளிக்கொடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. முதலில் செருப்பாலடிக்க வேண்டியது இவர்களின்றி வேறு யார்....


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=373:2009-08-31-14-22-17&catid=901:2009-08-16-09-44-24&Itemid=60

Wednesday, July 22, 2009

@ 10:08 AM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்



















அறுத்தெறிவோம் வாரீர் !! என அண்ணன் சீமான் அழைத்தான், அது ஒரு பொதுக்கூட்டத்திற்கான அழைப்பே ஆகும். 90களில் வைகோ அவர்களின் கூட்டதிற்கு மட்டுமே அவ்வளவு கூட்டம் சேரும் மதுரை மேலமாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பு நிறைவதற்கு 5000 மக்கள் தேவை கூட்டமோ இருமடங்கு அரசியல் சாராத, தானிருக்கும் இயக்க கொடி பிடிக்காமல் முகாம்கள் எனும் போர்வையில் சிங்கள அரசின் சிறைக்கூடங்களில் வதையுறும் 3,50,000 மக்களை மீட்டெடுக்க பத்தாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கூடி முழங்கினர். அதன் புகைப்படங்கள் இங்கே !




செல்லப்பா பாடுவது யாழ் / முத்தவெளியா அல்லது மேலமாசி வீதியா என்கிற சந்தேகம் எழுப்பியது அவரின் முன்னால் பறந்த தமிழீழ தேசியக்கொடி
























மதுரை "நாம் தமிழர்" பொதுக்கூட்டம்

Monday, July 06, 2009

@ 10:46 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்









ஊடும் பாவுமாய் நீரிலையும்
வண்ணத்துப்பூச்சியின் உடலாய்
வாழ்க்கை - நிலம் பார்த்து விரிந்து கிடக்கும்
சிறகினில் மெல்ல கவிழும் இருள்
சலனமற்று பார்த்தவாறே இருக்கிறான்
காலக்கிழவன்

Sunday, July 05, 2009

@ 4:02 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்



இல்லண்ணே சொல்லுங்க..

பின்ன என்னாதுக்குய்யா அத்தன தடவ கூப்பிட்டும் போனை எடுக்கலை, சரி அத விடு கரகாட்டம் பார்க்க வர்ரீயா என் கோபால் கூப்பிட மாரிமுத்து ஜகா வாங்கினான், காரணம் கோபால் ஜொள்ளு உலகறிந்த விதயம் அதிலும் மாரிமுத்துவோ இயல்பாகவே சபை கூச்சம் அதிகம் உள்ளவன் அவன் இலக்கிய கூட்டங்களுக்கு குறைந்தபட்சம் கட்டிங்காவது போட்டுவிட்டு போவதற்கு காரணமே அந்த சபை கூச்சம்தான், இலக்கிய கூட்டத்திற்கே அஞ்சுபவன் நடுத்தெருவில் கரகாட்டத்தினை ஒரு நாள் கூட நின்று பார்த்ததில்லை. இவன் வேறு இப்போது கூப்பிடுகிறான் வரவில்லை என தட்டிகழிக்கவும் முடிந்து தொலையாது இவனது ஸ்டராங்கான "அரசியல் சோர்சே" கோபால் ஒருத்தன் தான் ( மாரிமுத்து " தமிழக கரகாட்டம், காபரே,ஸ்டிரிப்டீஸ், வட இந்திய,பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிய முஜ்ராக்கள் பற்றிய ஒரு திறனாய்வு" என்கிற தலைப்பில் சாணி பேப்பரில் பதினாறு பக்க வெளியீடு ஒன்றை தனது வானம் வெளீயீட்டகம் சார்பில் கொணர்ந்தான் அதன் மொத்த விற்பனை உரிமையும் அர்ஜுனனிடம் கொடுத்து "வந்த விலைக்கு வித்துருங்க, விலை 5 ரூவாதான் போட்டுருக்கேன்" என்று சொல்லி கொடுத்தான். அர்ஜுனன் பொது நிகழ்ச்சிகளில் புத்தகம் விற்பனை செய்பவர், மறுநாள் மாரிமுத்துவை தேடிபிடித்து " என்னய்யா தலைப்பு எதோ வித்தியாசாமா இருக்கு சரி விக்கிற வரைக்கும் விக்கட்டும் நம்ம தோழர்தானென்னு வாங்கிட்டு போனா உள்ள பூராம் அம்மணக்குண்டி படமா இருக்கு, இதுவரைக்கும் பிரபாகரன் படம் வித்துதான்யா உள்ளார போயிருக்கேன், சீன் படம் விக்க வச்சு உள்ள அனுப்பிடாத" என்று அவனது முதல் வெளியீட்டை திரும்ப கொடுத்து விட்டு போனது கோபால் வர்ரீயா எனக்கேட்ட நொடியில் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை)



































Tuesday, June 09, 2009

@ 8:17 PM எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்


மாரிமுத்துக்கு கோபாலிடமிருந்து வரும் அழைப்பை போல அலுப்பான விதயம் வேறொன்றுமில்லை. கோபால் இடமிருந்து அழைப்பு வந்தாலே ஒரு வித நடுக்கம் கொஞ்ச நாளாய் தனக்கு வருவதை அறிந்திருந்தான்.

"துயரத்தில் துயரம் பெருந்துயரம் அத்துயரம்
துயரத்தில் எல்லாம் தலை"ன்னு

இவனா அவனுக்குன்னு எழுதிய குறள் வேறு நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. காரணம் என்னான்னா கோபால் மாரிமுத்துவின் ஊரில் மிக பெரிய"தல" ஒன்றின் ஓட்டுநராக இருந்தான். மாரிமுத்துவோ அவ்வப்போது அந்த தலைக்கு "சொம்படித்து" பொழைப்பை பார்த்து வருபவன். எனவே கோபாலின் தேவைக்கு இவனுக்கு வேண்டியதாய் இருந்தது. எவனாவது காது கொடஞ்சுகிட்டே "அப்புறம் "தல" எங்க'ன்னு சும்மானாச்சுக்கும் கேட்ட கூட "பூஸ்டர்" பேக் போட்டிருக்கிற மொபைல எடுத்து "ண்ணா எங்கண்ணா இருக்கிங்க"ன்னு கேட்டு ஒரு வித தோடுடன் "கவுஞ்சிகிட்ட இருக்காங்கலாம், அரை மணி நேரத்துல வீட்டுல இருப்பாராம் போய் பாருங்க'ன்னு சீன் போடுவான். ஆனா உண்மையில் அவன் பேசியது கோபாலிடம் அந்த உரையாடல் இப்படியாய்த்தானிருக்கும்.

"ண்ணா எங்கண்ணா இருக்கிங்க"

"யோவ் சும்மா நொய்யு நொய்யின்னு கால் மணிக்கு ஒரு தடவை போன் பண்ணாதேன்னு எவ்வளவு தடவையா சொல்லுறது; அரை மணி நேரத்துல தல வீட்டுக்கு வா"

இப்படி எரிந்து விழும் கோபால் "தல" ஊருக்கு போயிட்டாலோ அப்படியே டிட்டோவாக மாறிவிடுவான் "எங்கையா போயிட்ட ஆளே காணாம், நீ ரொம்ப பிசியான ஆளு எங்களையெல்லாம் கண்டுக்குவியா... நீயிதான் பெரிய தொழிலதிபர் ஆயிட்ட ( "தல" மாரிமுத்துக்கு ஒரு டூபாக்கூர் அரசு அலுவலகத்துக்கு முன் டீக்கடை நடத்திக்கொள்ள அனுமதி வாங்கி கொடுத்திருந்தார். அந்த ஆபீஸோ மதியம் 2 மணிக்கெல்லாம் ஈ,காக்காகூட பறக்காத ஏரியாவாகிவிடும். அவன் கேட்டது அரசு பொதுமருத்துவமனையில், தமிழ்நாட்டில் பிசியாக இருக்கும் ஒரே அரசுத்துறை அதுதானே, அதனால் அங்கு கேட்டான். ஆனால் அந்த இடத்தை "நடிகர்" கட்சியிலிருந்து மொத நாள் வந்தவனுக்கு கொடுத்துவிட்டு, மாரிமுத்துக்கு இந்த பாடாவதி இடத்தை மாரிமுத்துவின் தலையில் கட்டிவிட்டார். "நடிகர்" கட்சியிலிருந்து வந்தவன் தன் பெயருக்கு டீக்கடை மாறியவுடன் "தலை"யின் வாயில் வாழைப்பழத்தை வைத்துவிட்டு மீண்டும் தாய்க்கழகத்துக்கு போய்விட்டான் என்பது இப்பிரதியின் கிளை வயித்தெறிச்சல்) ஒரு போன்கூட பண்ணுறதுல்ல

இப்படி தொடங்கும் உரையாடல் மேற்படி மேட்டரில் வந்து முடியும், ஏன்யா கெமினோ'ன்னு ஒரு சரக்கு இருக்கே அது நல்லாருக்குமா.

மாரிமுத்து Old monk கட்டிங் வாங்கிதாரேன்னு சொன்னா கூட அது 40 கிலோ மீட்டர் தூரமாய் இருந்தாக்கூட மிதிவண்டியில கொரங்கு பெடல் போட்டே போய் குடிச்சுட்டு வருபவன் என்றாலும் "உலக சரக்கு"கள் பற்றி ஒரு விரிவுரை நடத்துமளவுக்கு "விஷய" ஞானம் உள்ளவன். "தல"க்கு வந்த சக்கரை நோயினால் அவருக்கு வரும் இறக்குமதி சரக்குகளை ஒரு வித வயித்தெறிச்சலுடன் தல கோபாலிடம் கொடுத்துவிடுவார். கோபால் அதன் லேபிளில் இருக்கும் பெயரை கடினபட்டு எழுத்துக்கூட்டி படித்து மாரிமுத்துவிடம் அவற்றின் குலம் கோத்திரம் தெரிந்து சபையில் பீலா விட்டுக்கொள்வான்.

தல ஊரிலிருக்கும் போது மாரிமுத்து கோபாலை போன் பண்ணி டார்ச்சர் கொடுத்தால் "தல" போன பிறகு அவன் இவனை போன் பண்ணி இப்படியான இம்சைகளை கூட்டுவான்.

ஜானி வோக்கர் புளு லேபிள் நல்லா இருக்குமாய்யா ? இப்படி ஒரு நாள் கேட்டா மறுநாள் "ரெமி மார்டின் நல்லா இருந்துச்சுய்யா நேத்து; உன்னைய கூப்பிடனும்னே இருந்தேன் மறந்தே போயிட்டேன்"என்பான். மாரிமுத்து ஓசி கட்டிங்கே ஏழுமலை ஏழுகடல் தாண்டி போற ஆளாச்சா, இப்படி ஒசத்தி சரக்குன்னா சந்திரமண்டலத்துகே போவான்,இந்த வெறுப்பையெல்லாம் வச்சு அன்னைக்கு நைட் எச்சா ஒரு குவார்ட்டரு செலவாகும் .

இப்படித்தான் ஒரு நாள் போனில் அழைத்தான் கோபால்.

நேத்து நைட்டுதான்யா "தல" பாண்டியன்ல போனாரு, உன்ன கூட கேட்டாருய்யா. எதோ நர்ஸ் டிரான்ஸ்பர் கேட்டு இருந்தியாம்ல, அந்த பேப்பர கூட மறக்காம வாங்கிட்டு போனாருய்யா என்றபடி மொக்கையை போட ஆரம்பித்தவன், வழக்கம் போல் சாராயப்பேச்சை ஆரம்பித்தான். ஏன்யா சதர்ன் கம் பாடுன்னு ஒரு அயிட்டம் இருக்காய்யா? எப்படிய்யா இருக்கும். இன்னைக்கு மதியம் அதைத்தான் போடலாம்ன்னு இருக்கேன். அந்த மாணிக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி "தலை"க்கு கொடுத்துட்டு போனாரு. நல்லாருக்குமா? என்றான்.

ண்ணே அது செமையா இருக்கும்ண்ணே ! ஆனா பேரு சதர்ன் கம்பொர்ட்'ண்ணே. எங்க அண்ணன் ஒருத்தர் ஜேர்மனியில இருக்காரு அவரு வாங்கியாந்து கொடுத்தாரு.

அது எப்படிய்யா எந்த சரக்கு பத்தி கேட்டாலும் அது பத்தி புல் டீடெயில்லு சொல்லுற, உலகத்தில இருக்கிற எல்லா மேட்டரையும் டேஸ்டாவது பாத்திருக்கிற ஆச்சரியமா இருக்குய்யா என்று ஒரு மைல்டான வயித்தெறிச்சலுடன் சொன்னான் கோபால்

( ...ம்க்கும் ப்லாக் மட்டும் எழுதிப்பாரு அண்டார்டிக்கால இருந்து கூட சரக்கு வரும், ஆனா பொட்டீக்கடை'ன்னு ஒருத்தன் இருக்கான் அவன் மட்டும் மணியாட்டிகிட்டு வருவான். இங்க வந்தும் பிஃப்த் லெக் வைன்'தான் வேணும் "ஃபோர்த் பூல்" (POOL'ங்க :P ) ஸாம்பெயின்னு தான் வேனும்ன்னு அடம்புடிப்பான் அப்புறம் சைனா பஜாரு பர்மா பஜாருன்னு அலையனும் - மாரிமுத்துவின் ஆஆஆஆழ்மனசு)

இப்படியான உரையாடல் இருவேறு விதமான பொச்செரிச்சலுடன் முடிந்த அன்று மாலை மறுபடி கோபால் அழைத்தான், "அப்புறம் நண்பா, வேலையா இருக்கியா ( மாரிமுத்து கோழிக்கு மயிறு புடுங்கும் வேலையில்கூட நிலையாய் இருந்ததில்லை என்பது வேறுவிதயம், அது கோபாலுக்கும் தெரியும். ஒரு பேச்சுக்கே அப்படி கேட்பான். எப்போதெல்லாம் அப்படி கோபால் கேட்கிறானோ அப்போதெல்லாம் நொனங்க ஒரு வேலை சொல்லி மாரிமுத்துவின் பெண்டை நிமுத்தி பார்ப்பதில் அலாதி பிரியம் அவனுக்கு)


தொடர்வேன் -